சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.028
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த, பண் - இந்தளம் (திருக்கருவூரானிலை (கரூர்) பசுபதீசுவரர் கிருபாநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=xX-OlINJTaA |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.028  
தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த,
பண் - இந்தளம் (திருத்தலம் திருக்கருவூரானிலை (கரூர்) ; (திருத்தலம் அருள்தரு கிருபாநாயகியம்மை உடனுறை அருள்மிகு பசுபதீசுவரர் திருவடிகள் போற்றி )
தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த, நஞ்சு உண்ட ஆர் உயிர் ஆய தன்மையர்; கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை அண்டனார், அருள் ஈயும் அன்பரே. | [1] |
நீதியார், நினைந்து ஆய நால்மறை ஓதியாரொடும் கூடலார், குழைக் காதினார் கருவூருள் ஆன்நிலை ஆதியார், அடியார்தம் அன்பரே. | [2] |
விண் உலாம் மதி சூடி, வேதமே பண் உளார், பரம் ஆய பண்பினர், கண் உளார் கருவூருள் ஆன்நிலை அண்ணலார், அடியார்க்கு நல்லரே. | [3] |
முடியர், மும்மதயானை ஈருரி; பொடியர்; பூங்கணை வேளைச் செற்றவர் கடிஉளார் கருவூருள் ஆன்நிலை அடிகள், யாவையும் ஆய ஈசரே. | [4] |
பங்கயம் மலர்ப்பாதர், பாதி ஓர் மங்கையர், மணிநீலகண்டர், வான் கங்கையர் கருவூருள் ஆன்நிலை, அம் கை ஆடுஅரவத்து எம் அண்ணலே. | [5] |
தேவர், திங்களும் பாம்பும் சென்னியில் மேவர், மும்மதில் எய்த வில்லியர், காவலார் கருவூருள் ஆன்நிலை, மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே! | [6] |
பண்ணினார், படி ஏற்றர், நீற்றர், மெய்ப் பெண்ணினார், பிறை தாங்கும் நெற்றியர், கண்ணினார், கருவூருள் ஆன்நிலை நண்ணினார், நமை ஆளும் நாதரே. | [7] |
கடுத்த வாள் அரக்கன், கயிலையை எடுத்தவன், தலை தோளும் தாளினால் அடர்த்தவன் கருவூருள் ஆன்நிலை, கொடுத்தவன், அருள்; கூத்தன் அல்லனே! | [8] |
உழுது மா நிலத்து ஏனம் ஆகி மால், தொழுது மா மலரோனும், காண்கிலார் கழுதினான், கருவூருள் ஆன்நிலை முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே. | [9] |
புத்தர் புன் சமண் ஆதர், பொய் உரைப் பித்தர், பேசிய பேச்சை விட்டு, மெய்ப் பத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே! | [10] |
கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம் பந்தன் சேர் கருவூருள் ஆன்நிலை எந்தையைச் சொன்ன பத்தும் வல்லவர், சிந்தையில் துயர் ஆய தீர்வரே. | [11] |